பெரமன
ரெ ட்டியாரு பாத்து மகாலிங்கத்துக்கு ஒதுக்குனதுதான் தெக்க ஓட பக்கம் பெரியாண்டவங் கோயிலுகிட்ட இருக்க வயலு. மே சாதிக்காரங்க வய சுத்தி நடுவுல மகாலிங்கம் வய... அவங்கப்பா மம்மல ரெட்டியாருக்கு ஒழச்ச ஒழப்ப 'நாலு சனம் சொல்லும் நாயக்கன் வூட்டு நாய் சொல்லும் பேய் சொல்லும் பெரியாண்டவங் கத்தி சொல்லும்... ராப் பகலா கம்முழிச்சி தண்ணி பாச்சி ஒத்த ஆளா சூரியங் கௌம்ப முன்ன அண்ட எடுத்து நாத்தடிக்க நாலு ஆளுவோல கூட்டியாந்து ஓடி ஆடி வெள்ளாம பாத்து நெல்லு மூட்ட வூடு வர வரைக்கும் வயலுக்கு வர மாட்டாரு பெரிய ரெட்டியாரு. கரும்பன் இருக்கான் எனக்கு சோத்துக்கு கொறச்சலா சொகத்துக்கு தவிச்சலான்னு வூட்டுலயே கெடப்பாரு.....நாப்பது ஏக்கரு வய ரெட்டியாரூட்டுத்து சுத்துப்பட்டுல மிஞ்சிக்க ஆளு இல்ல இவரு சொத்துக்கு.. காலங் காலமா அள்ளி குடுத்த கையி மம்மல ரெட்டியாரு குடும்பத்துக்கு. நாப்பது ஏக்கருக்கும் சரியான ஆளுவோ இருந்தாலும் கரும்பங் காவ காக்குற வயலு நல்ல வெள்ளாமன்னும் ராசிக்காரன்டான்னும் ஒவ்வொரு தடவ அறுப்பு முடிஞ்சதும் ரெண்டு மூட்ட நெல்லு போயிடும் வூட்டுக்கு... மத்த வயலுக்கு காவ இருக்க ஆளுவோ மனசு கஷ்டப்பட்டா நமக்கு ஏது சோ...