இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாசம்

படம்
"அண்ணங் பணங் கிணம் அனுப்புச்சா இல்லியா?" "நாளு வந்து சாவங்காட்டியும் நாழில பூடுவம் போல.... பணமும் அனுப்புல கிணமும் அனுப்புல... கன்னு யாவாரம் பன்றேன்., கன்னு யாவாராம் பன்றேன்னு.. எவள்ட்ட வாங்கி குடிச்சிட்டு கெடக்குறான்னு தெர்ல" தீபாவளி,பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு தவறாது அப்பாவின் வருகையை எதிர்பார்க்கலாம். வானத்து நீல... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த முழுக்கை சட்டை எப்பவும் அணிந்திருப்பார். அரைத் தூக்கத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் முனகல் கேட்கும். அதனூடே வரும் வாசனைதான் அப்பாவின் வருகையை உறுதி செய்யும். "கன்னு வித்த காச தலமாட்டுல வச்சிட்டு தூங்குனேன் எவனோ எடுத்துட்டான்" என அப்பா சொல்வதை அம்மா நம்பவில்லை. இவர்களின் சச்சரவுகள் ஒருபுறமிருக்க...கொண்டு வந்த பையைத் திறந்து திறந்து பார்ப்போம் நானும் அக்காவும். கால் கிலோ ஓல பக்கோடாவை பல் விளக்காத அந்தக் காலையில் அவசர அவசரமாக அக்கா உண்பாள்.  வீடே வாசம் பரப்புகிற அந்த டப்பியை ஒளித்து வைத்துக்கொண்டு முகர்ந்து பார்ப்பேன். "கன்னு வித்து கிழிச்சதெல்லாம் போதும்...முச்சாரமனத்துல(முத்துசேர்வாமடம்) ஒரு ஆளு ...