பாட்டு
"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு". கவிஞர் வெய்யில் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை அப்போதே பார்த்துவிட்டேன். அதே நிகழ்ச்சியில் 'நாதம் என் ஜீவனே' பாடலை ஒரு பெண் பாடியிருப்பார். அதையும் இந்தக் காணொளியையும் அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக வெய்யிலின் குரல் அவர் கவிதையைப் போன்றே எனக்குப் பிடித்திருந்தது ஒரு காரணம். சமீபத்தில் கூட அவரின் முகநூல் பக்கத்தில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பாடலை பதிந்திருந்தார். அதை எனது நண்பருக்கு அனுப்பியிருந்தேன். "வாவ்...வெய்யில் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் அவர் பாடுவார்னு இப்பதான் தெரியும்"னு அனுப்பியிருந்தார். இந்தப் பதிவு வெய்யிலுக்கானதல்ல., வெய்யிலாலானது. இப்பல்லாம் பேசுறதுக்கும் எழுதுறதுக்குமே ஒரு தயக்கம் இருக்கு...'பூமர் அங்க்கிள்'னு கமெண்ட் பண்ணிடுவாங்களோன்னு... மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒலிக்கிற பாடல் காற்றில் மிதந்து காதில் கேட்கும் என சொல்லியிருப்பார் வெய்யில். அந்த உண்மைக்காகத்தான் இதை எழுதணும்னு நினைக்கிறேன். முதல் டி.வி...