இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கார்முகிலும் நீலத்திமிங்கலமும்

படம்
  கார்முகில் தன் தாத்தாவோடு மலை உச்சிக்குச் சென்றாள். அவர்கள் வீடு அழகான மலைக் கிராமத்தில் உள்ளது. உயரமாக வளர்ந்திருந்த கோரைப் புற்களை கைகளால் உரசி உரசி விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் அமர்வதற்கு ஒரு இடத்தைத் தேடினர். யானையின் தலையைப் போல இருந்த அழகான பாறை மீது அமர்ந்தனர். “கார்முகில்…” என்றார் தாத்தா. “சொல்லுங்க தாத்தா…” என்றாள். “உன்னைக் கூப்பிடவில்லை. அதோ பார் கார்முகில்.” என்றார். “என் பெயர்தானே கார்முகில்” என்றாள். “அதோ அந்த கருத்த மேகத்தின் பெயரும் உன் பெயரும் கார்முகில்தான். முகில் என்றால் மேகம். கார்முகில் என்றால், கருத்த மழை தரும் மேகம்னு அர்த்தம்” என்றார். கார்முகில் வியப்புடன் தாத்தாவையும் மேகங்களையும் பார்த்தாள். “தாத்தா, அதோ பாருங்க அந்த மேகம் நம் வீட்டுக் கன்றுக்குட்டியைப் போல் உள்ளது” “இதோ இங்கே பார் நம் தோட்டத்தில் இருக்கும் ஆலமரத்தைப் போல மேகம்” என்றார் தாத்தா. “அங்கே பாருங்கள் தாத்தா, மிகப் பெரிய மீன் போல மேகம்.” “அது மீன் என்று நினைக்க வேண்டாம். நீலத்திமிங்கலம் இப்படித்தான் பெரிதாக இருக்கும்” “பெரியது என்றால் எவ்வளவு பெரியது தாத்தா” “அதன் இதயத்தில் நீ அமர்ந்து...

பச்சைக் கொம்பனும் பாசக்கார எறும்பும்

படம்
  குளத்து ஓரத்தில் அழகான புற்களும் மரங்களும் இருந்தன. அருகே கரும்பு நன்றாக விளைந்திருந்தது. அங்கு வசித்து வந்த எறும்பும் பச்சைக்கொம்புப் புழுவும் நண்பர்களாக இருந்தன. இரவு நேரமானால், கரும்பின் சோகையை நறுக் நறுக் என்று கடித்துத் தின்னும் பச்சைக் கொம்பன். “நண்பா பச்சைக் கொம்பா கொஞ்சம் தூங்க விடுகிறாயா?” என்றது எறும்பு. “நான் என்ன செய்ய நண்பா, இரவில்தான் என்னால் சாப்பிட முடிகிறது” என்றது பச்சைக் கொம்பன். வேறு இடம் மாற்றித் தூங்கியது எறும்பு. மறுநாள் காலையில் தன் நண்பன் புழுவைத் தேடிச் சென்றது. அங்கு புழுவைக் காணவில்லை. பலமுறை அழைத்துப் பார்த்தது. எதிரே வந்த நண்டு, “எறும்பு நண்பா யாரைத் தேடுறீங்க” என்றது. “எனது நண்பர் பச்சைக் கொம்பனைக் காணும்.” என்றது எறும்பு. “குளத்தில் ஒரு இலையின் மேல் விளையாடிக் கொண்டிருந்தது” எனச் சொல்லிவிட்டு நண்டு தன் வீட்டுக்குச் சென்றது. தானும் விளையாடலாம் என மகிழ்ச்சியோடு சென்றது எறும்பு. எறும்பைப் பார்த்த பச்சைக் கொம்பன், “வா நண்பா வந்துட்டியா… உனக்காகத்தான் காத்திருந்தேன்.” என்றது பச்சைக் கொம்பன். “ஓ… ஜாலி… நானும் விளையாட வரவா நண்பா… என்னிடம் சொல்லியிருந்தான்...