இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாழிசையின் தோட்டம்

படம்
  யாழிசை ஒரு வேப்பமரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு காகம் ஒன்று வந்தது. காற்றில் அசைந்த வேப்பமரம், “என்ன காகமே நீ தங்குவதற்கு இடம் தந்தேன். காற்று உன் கூட்டைக் கலைத்துவிடும் போலயே” எனக் கேட்டது. “நீங்கள் ரெண்டு பேரும் தங்குவதற்கு நான்தான் இடம் தந்துள்ளேன்” என்றாள் யாழிசை. “குட்டிச் சிறுமியே… என்னால்தான் உன்னால் மூச்சு விட முடிகிறது. நான் இல்லையென்றால் மனிதர்கள் நீங்கள் யாருமே இல்லை” என்றது வேப்பமரம். “ஹா… ஹா… நான் இல்லையென்றால் நீ வளர்ந்திருக்கவே முடியாது.” மண்ணை முட்டி மேலே வந்த மண்புழு, வேப்பமரத்தைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தது. கோபம் கொண்ட காகம், “மண்புழு நண்பா அதிகம் பேசாதே… நான் ஒருமுறை தின்று போட்ட வேப்பம்பழம் தான் இன்று வேப்பமரமாக வளர்ந்து நிற்கிறது.” “கொஞ்சம அமைதியா இருக்கீங்களா… எங்க டீச்சர் தான் எனக்கு நிறைய சொல்லித் தருவாங்க. நம்மில் யார் பெரியவர் என்று தெரிந்து வருகிறேன். அதுவரை அமைதியா இருங்க.” என்றாள் யாழிசை. மறுநாள், யாழிசை சோகமாகத் தோட்டத்திற்கு வந்தாள். மண்புழு, “என்ன குட்டிப் பெண்ணே… நான்தான் பெரியவர் என்று உங்க டீச்சர் சொல்லியிருப்பாங்களே… ஆங்… எனக...

தெவசம் - 2

படம்
தி டுத்திடுவென தோட்டத்திற்கு ஓடி பூவரசையும் பலாவையும் இணைத்துக் கட்டிய கொடியில் காயப் போட்டிருந்த சட்டைகளில் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டே... "தாத்தோவ்... நில்லு நானும் வரேன்..." என்றான் தங்கமணி. "நீ எங்கடா வர... வெய்ய தாங்கமாட்ட... வூட்லயே சோத்த தின்னுட்டு வெளாண்ட்டு கெட..." "யாங் இந்த பய வந்தா... மூத்தரம் குடிக்க முடியாதுன்னு வேணாங்குறிய..." என்று முகங் காட்டினாள் சிவப்பாக்கியம். "யாங் வாயில எதாவது வந்துட போவுது... நீலாம் பொம்பளயாடி... ஒப்பனா அவுத்து குடுத்தான் குடிச்சிட்டு வர... இல்ல ஒம்மா அவுத்து குடுத்தாளா... பேச்சு மயிரு பேசுற பேச்சு..." "ந்தாரு... இங்க வச்சிக்கிறதோட நிறுத்திக்கணும். ஆத்தா அப்பன இழுத்தா... நடக்குறதே வேற.... யாங் என் ஆத்தா அப்பன் அவுத்தத வாங்கிட்டு வந்து வக்கனையா திங்கிம்போது தெரிலியே..." எனப் பெருமூச்சு விட்டாள். இருவருக்குமான சண்டையைப் பார்த்துக் கொண்டே... மெதுவாக பின் நகர்ந்தான் தங்கமணி. "இந்த வக்காள ஓழியால வர்றது... இம்மோனும். பள்ளிக்கொடம் போனா என்ன... யாங் நண்டு புடிக்க வரேன். நொண்டு புடிக்க வரேன்ன...

தெவசம் - 1

படம்
கிழக்கே சிங்காரு வீட்டிலிருந்து ஒலிக்கும் தமுரு சத்தத்தோடு அவுரவத்தம்மாளின் கொடி முருங்கை மேலிருந்து சேவலும் கூவுவது விடியலுக்கான அரவங்களாக அன்றாடம் நிகழ்வது போன்ற உடல் பாவனையோடு புரண்டு படுத்தாள் சிவப்பாக்கியம். ஆங்காங்கு சேவல் கூவுவதும் நாய்கள் குரைப்பதுமாக இருந்தபடியால் முனகிக் கொண்டே எழுந்தாள். "செத்த நாழிதான் ஆவுது கண்ணசந்து அதுக்குள்ள விடிஞ்சிருச்சி... என்ன மட்டும் என்ன கல்லயா ஒழ்த்து பெத்தாங்க... நல்லா என் நெளுவ ஆராஞ்சிக்கிட்டுதான் எழுந்திருப்பனான்னு படுத்து கெடக்குறா குச்சிகரி மொவ" என மேற்கே செல்லாத்தா வீட்டுக்கு சாணமெடுக்க நடந்தாள். வழி கூட்டி வைக்குமிடத்தின் அருகில் புளியமரத்தடியில், நாளைக்கு ஒரு நாள் விட்டால் அதுவே செத்துப்போகும் நிலையிலிருந்த மாடொன்றை கறி போடத் தயாராக கட்டி வைத்திருந்தனர்  பூராயிரும் சேங்கணத்தாரும். பாரையும் சுத்தியலுமாக  கறி போடும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் கணேசன். "சின்னவன... எலும்பு கறியா ஒரு கிலோ எடுத்து வையி... பயல அனுப்புறேன்" என சாணமெடுக்கச் சென்ற சிவப்பாக்கியம் கணேசனிடம் சொல்லிவிட்டு சாணத்தோடு திரும்பினாள்....