இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாவுக் கழிச

படம்
"யே... வில்லழகி.... வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "இந்த பன்னிகுட்டிவோள அவுத்து வுட்டேன். செத்த நேரம் மேச்சிட்டு கைனி தண்ணி காட்டி கட்டிப் போட்டுட்டு வர்றேன் செத்த நாழி இரு." "யே... கமலா.. வெளக்கமாரு ஒடிக்க வர்றீயா?" "எந்த பக்கம் போறீங்க..."  "வடக்குவெளிதான் மரக்காயமூட்டு தோப்பு இருக்குல்ல அங்கதான். வெள்ளையம்மா வர்றன்னுது அத கூப்புடு... வேற ஆராரு வர்றன்னுது. தே... வில்லழகி வரா நீனு, நானு, வெள்ளையம்மா வந்தா நாளு பேரு கணக்காச்சி... நீராரத்த ஒரு மொரடு ஊத்திட்டு வர்றன்" என்று காய வைத்திருந்த மா வடுவை எடுத்துக் கொண்டிருந்தாள் கமலா.  "ஓ.... செயிலம்மா....வ்...." வில்லழகி தொண்டை அடைக்க கத்தினாள்.  கமலாவும் செயிலும் வில்லழகியின் வீடு வந்தனர். பன்னிக்குட்டிகளை கட்டிவிட்டு மூங்கில் படலை அடைத்துவிட்டு வந்தாள் வில்லழகி. "எங்கியே வெள்ளையம்மா வருதுன்னீங்க.... வூட்டுல போய் கேட்டன் ராத்திரி அந்தாளு போட்டு அடிச்சிருக்கான் கோச்சிக்கிட்டு ஆத்தா வூட்டுக்கு பிச்சனூரு பூட்டாளாம். அவ பெரிய மொவஞ் சொன்னான். அந்தப் பய அப்படியே ஆத்தாளாட்டும்டீ...நெறத்த...

படையல்

படம்
" நா லு மாசமா படுத்தப் படுக்கயா கெடந்தேன். ஒரு நாயி வந்து சீண்டுல. இன்னக்கி பொணச்சிட்டு கெடக்குறாளுவோ... ஓப்புடியாளுந் தானும்.  திங்க சோறத்து... குடிக்க தண்ணியத்துதான்டீ போவீங்க சக்காள்த்திவோளா...  ஒரு டீ தண்ணிக்கு வழியுண்டா? ஒரு மாத்துர மருந்துக்கு வழியுண்டா? இதே எடத்துலதான்... அந்த பெரிய குச்சிக்கரி மல்லாந்து கெடக்குறாள அந்த எடத்துலதான் பெரலக்கொட தெம்பில்லாம படுக்கைல மூத்துரம் போய்ட்டு கெடந்தேன். முடியாத பொம்பளயாச்சேன்னு ஒருத்தி வந்து என்னான்னு எட்டி பாத்துருப்பாளுவோளா..  வந்ததெல்லாம் வச்சிக்கிட்டு வக்கனையா திங்கிறாளுவோ...யாரு ஆயி அப்பன் சம்பாரிச்சிது.  பொழுதுக்குள்ள ஆளா பாதியா கெளம்பி பூடுலண்ணா....கள்ளிமட்ட வச்சி கட்டிடமாட்டன் ரெண்டு செறுக்கிவொளயும்....  வாய கொண்டாந்தவ வூட்டு உள்ளப் போனாளாம்...  வாழப்பழம் கொண்டாந்தவ வாசல்ல நின்னாளாம்...  யாங் ஒழையல்ல திண்ணு....யாங் புருசன் ஒழையல்ல திண்ணு நொட்டிப்புட்டு ... ஒரு மொரடு நீராரத்துக்கு வழியில்ல, இன்னக்கி எனுத்த பாரு என் மொவள்த்த பாருன்னு நல்லா விரிச்சிட்டு தூங்குறாளுவோ...." "யாங்.... ஓம் மொவளுவோளுக்குதான ...