இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாட்டு

படம்
"நம்ம திட்டமிடாத ஒரு பொழுதில் நம் வாழ்க்கைக்குள்ள ஒரு பாடல் வருது அதனாலதான் அது ஸ்பெஷலா இருக்கு". கவிஞர் வெய்யில் கலந்துகொண்ட இந்த  நிகழ்ச்சியை  அப்போதே பார்த்துவிட்டேன். அதே நிகழ்ச்சியில் 'நாதம் என் ஜீவனே' பாடலை ஒரு பெண் பாடியிருப்பார். அதையும் இந்தக் காணொளியையும் அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக வெய்யிலின் குரல் அவர் கவிதையைப் போன்றே எனக்குப் பிடித்திருந்தது ஒரு காரணம். சமீபத்தில் கூட அவரின் முகநூல் பக்கத்தில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பாடலை பதிந்திருந்தார். அதை எனது நண்பருக்கு அனுப்பியிருந்தேன். "வாவ்...வெய்யில் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் அவர் பாடுவார்னு இப்பதான் தெரியும்"னு அனுப்பியிருந்தார்.  இந்தப் பதிவு வெய்யிலுக்கானதல்ல., வெய்யிலாலானது. இப்பல்லாம் பேசுறதுக்கும் எழுதுறதுக்குமே ஒரு தயக்கம் இருக்கு...'பூமர் அங்க்கிள்'னு கமெண்ட் பண்ணிடுவாங்களோன்னு... மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒலிக்கிற பாடல் காற்றில் மிதந்து காதில் கேட்கும் என சொல்லியிருப்பார் வெய்யில். அந்த உண்மைக்காகத்தான் இதை எழுதணும்னு நினைக்கிறேன். முதல் டி.வி...

பத்தாயம்

படம்
த ஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக ஹரித்துவாரமங்கலம் சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்து ஏறினால் 'மருவத்தூர்' எனும் குக்கிராமம். அங்குதான் வேலை. பன்னெடுங்கால சிவன் கோயிலை மீட்டுக் கட்டியெழுப்ப வேண்டும். தாய் மாமனுக்கு முதல் காண்ட்ராக்ட் வேலை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறை என்பதால் நானும் வேலைக்குச் சென்றிருந்தேன். அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கர்ப்பக் கிரகம் என இருந்த பழைய பாழடைந்த கருங்கற் கோயிலை அப்படியே பிரித்து அப்படியே கோர்க்க வேண்டும். விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும். ஆளாளுக்கு பாடல்கள் போட வாய்ப்புண்டு. நான் அப்போது சாம்சங் பட்டன் போன் வைத்திருந்தேன். ஒரு ஜி.பி. மெமரி கார்டு முழுக்க மதுரை சந்திரன் பாடல்கள்தான். 'உன்னை பெத்த தோசத்துக்கு ஒரு மண்ணை பெத்தாலும் வாழ்ந்திருப்பேன். கண்ணை வித்து சித்திரம் வாங்கிய கதையா போச்சு... எலே கடன்காரனே தொலஞ்சி போன்னு கட்சி மாறியாச்சு, பெத்தவளும் கட்சி மாறியாச்சு' 'இலங்கையைக் குரங்கு எரித்தது அன்று. இலக்கியம் கூறும் சரித்திரம் உண்டு.' 'நாத்துனா மகனுக்கு என் பொண்ணக் கொடுத்து...' 'மாடு ம...