இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டின் தலைவர்!

படம்
அழகான அந்தக் காட்டில், விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒருமுறை, வேறு காட்டிலிருந்து நிறைய நரிகள் கூட்டமாக அங்கு வந்தன. “வணக்கம் நண்பர்களே…! நாங்கள் வழி தெரியாமல் உங்கள் காட்டிற்கு வந்துவிட்டோம். உங்கள் காடு மிகவும் செழிப்பாக உள்ளது. எங்களுக்கு உங்கள் காடு பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கு தங்க இடம் தந்தால், எங்கள் காட்டில் கற்ற வித்தைகளை உங்களுக்குக் கற்றுத் தருவோம்.” என்றன நரிகள். நரிகள் இனிமையாகப் பேசுவதைக் கேட்ட மான்கள், “நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்படி என்ன எங்களுக்கு கற்றுத் தரப் போறீங்க.” என்றன. நரிக் கூட்டத்தின் மூத்த நரி, “அதோ அந்த நாவல் மரத்தைப் பாருங்கள். அதிலிருந்து முந்திரிப் பழங்கள் விழும்” என்றது. எல்லா விலங்குகளும் பறவைகளும் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. நரி ஒன்று கீழே நிறைய முந்திரிப் பழங்களைப் போட்டது. எல்லோரையும் கீழே பார்க்கச் சொன்னது. “ஓ… என்ன ஆச்சரியம். ஐ… ஜாலி… ஜாலி…” என முந்திரிப் பழங்களைப் பார்த்துத் துள்ளிக் குதித்தன பன்றிகள்.  நாவல் மரத்திலிருந்த ஒரு காகம் பறந்து கீழே வந்தது. காகத்தைப் பார்த்த...

நண்பனைக் காணவில்லை

படம்
“அன்பு கழுதையே… என் நண்பனைப் பார்த்தாயா?” “காக்கையே… உன் நண்பன் யார்? உன் நண்பன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? நான் தெரிந்து வைத்திருக்க” என்றது கழுதை. “மன்னிக்கவும் அன்பு கழுதையே… என் நண்பன் எருமை. அவன் குளத்தில் விளையாடும்போது, அவன் மேல் அமர்ந்து நானும் விளையாடுவேன்.” என்றது காகம். கழுதை சத்தமாகச் சிரித்துவிட்டு, “நீயும் எருமையும் நல்ல பொருத்தமான நண்பர்கள்.” என்றது. காகம் அங்கிருந்து சோகமாகப் பறந்தது. பல இடங்களில் தன் எருமை நண்பனைத் தேடி அலைந்தது. அப்போது காகத்துக்கு ஒரு யோசனை வந்தது. தன் நண்பன் எருமைக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். சத்தமாக ஏதாவது இசையை ஒலிக்கவிட்டால், எருமை எங்கிருந்தாலும் வந்துவிடும் என நினைத்தது.  “அன்புள்ள மயிலே… என் நண்பனைக் காணவில்லை. நீ அகவும் சத்தம் இனிமையாக இருக்கும். நீ கொஞ்ச நேரம் அகவினால் என் நண்பன் கிடைக்க உதவியாக இருக்கும். குயிலையும் அழைத்து வருகிறேன்.” என்றது காகம். சிறிது நேரத்தில் குயிலும் வந்தது. மயில் அவகத் தொடங்கியது. குயில் கூவத் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள குளத்தில் மூழ்கியிருந்தது எருமை. குயில் கூவும்...