இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெவசம் - 5

படம்
" சூ டா... சூடா... விடிஞ்சிருச்சு பாரு எழுந்திரு..."  பாயில் கிடந்தவன் எப்போது சூடாவின் மடியில் படுத்தான் என்று தெரியவில்லை. தங்கமணியைத் தூக்கி தனியே படுக்க வைத்துவிட்டு சூடாமணியை எழுப்பிவிட்டாள் சிவப்பாக்கியம். "அந்த நாலு நண்டயும் புட்டுப் போட்டு இந்தப் பயலுக்கு ஒரு ரசம் வச்சி குடு. நத்த ஊருது, அதை கொதிக்க வச்சி நோண்டி பெரட்டி குடு. நாட்டுமகாரவங்கள பாத்து சேசனுக்கு போறத பத்தி சொல்லிட்டு வரேன்..." எனக் கிளம்பினாள். ஏ.வி.டி. டீ தூள் பையை வெற்றிலைப் பொட்டலமாக மாற்றியிருந்தார் சிங்காரு. வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தவரிடம், "சேசனுக்கு போயிட்டு வருவோம். ஒங்கூட இன்னும் ரெண்டு நாட்டுமகாரவங்கள அழச்சிக்க" என்று அவரது வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து சீவலை எடுத்து உள்ளங்கையில் வைத்து நிமிட்டினாள் சிவப்பாக்கியம். "பெரிய நாட்டான்ட்ட ஒரு வார்த்த சொல்லிடு. செகநாதன்ட்ட நான் சொல்லிட்றேன்." எனச் சுண்ணாம்பு குவளையை சிவப்பாக்கியத்திடம் தந்தவர், "காசி கீசி வச்சிருக்கியே... அங்க போனா ஆளுவோளுக்கு டீ கீ வாங்கி தரணும்." என்றார். ...