இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெவசம் - 4

படம்
இ லுப்பை மரங்களிலிருந்து வெளவால்களின் சத்தம். செங்கல் கால்வாய் வேலை முடித்து இரவு உணவுக்கு அடுப்பேற்றியிருந்தனர் பணியாட்கள். கோழிகளை கூட்டுக்குள் அடைத்தும் சேவல்களைக் கூடையிலும் கவிழ்த்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா செல்லபாங்கி. பங்காளி வீடும் இவர் வீடும் இணைந்து சுத்துக்கட்டு வீடாய் இருந்தது. கருப்பஞ் சோகையால் வேயப்பட்ட உயரமான திண்ணையுள்ள வீடு. மண் சுவற்றில் ஆங்காங்கு அடுக்குத் தேனிகளின் கூடு. முன்பக்க மாடத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் விசும்பிக் கொண்டிருந்தாள் வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா. "வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லப் போயி, அழச்சிட்டு பூட்டாங்க... நான் ஆர போயி புடிப்பேன். எப்படி கொண்டாருவேன்." என்றவள், பிள்ளைகளை மடியில் கிடத்தி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். "சோத்துல தண்ணி வூத்துட்டா... திங்கிறீங்களா" எனக் கோழிகளைக் கவிழ்த்துவிட்டு வந்து கணவரைப் பார்த்துக் கேட்டார் செல்லபாங்கி. "இவுனுவோ பாட்டுக்கு செவனேன்னு ஆக்கி எறக்குனத தின்னுக்கிட்டு பொழப்ப பாக்க வேண்டிதான. எதுக்கு இந்த வம்...

தெவசம் - 3

படம்
ஆ ற்றங்கரைக்கு மேல் வடக்கே தொரப்பு - வேலப்பூண்டிக்குச் செல்லும் சாலையும் தெற்கே பல்வாய்கண்டம் - கஞ்சங்கொல்லை செல்லும் சாலையும் வெறிச்சோடியிருந்தது. கிளுவை மரத்தடியில் அரிவாள் துணையில்லாமல் முறைத்து நின்றார் கரும்பாயிரம். மகனைக் கையில் பிடித்துக்கொண்டு கரும்பாயிரம் கோயிலை நோக்கி நடந்தார் வடவாத்தங்கரை ஆள். தோளில் கிடந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு,  "ஐயா சாமி... தாய பழிச்சதில்ல தண்ணிய பழிச்சதில்ல. யாரு வம்பு தும்புக்கும் போனதில்ல... எத்தினி நாளக்கிதான் ஒதப்பட்டு கெடக்குறது. இந்த தடவ வுட்டா மின்ன ஆன மேறி இப்பயும் வூடு வாச இல்லாம நிக்கணும். ராத்திரி தெருவுக்குள்ள பூர்றதுக்கு திட்டம் போட்ருக்கானுவோ மேலத்தெருவானுவோ... ஒருத்தனையாச்சும் புடிச்சி வெட்டுனாதான் கொஞ்சமாச்சும் பயமிருக்கும்னு... என் தம்பிக்காரன் சொன்னான்னுதான் உன் பொருளுல கைய வச்சேன். வெட்டுன பயலுவோ ஓடி ஒளியிற வேகத்துல ஆத்துல போட்டுட்டு பூட்டானுவோன்னு என் பொண்டாட்டிக்காரி சொல்லிதான் தேட வந்தேன். உன் புண்ணியத்துல அது எங் கையில கெடச்சிருந்தா... படி அளக்குற எஞ்சாமின்னு நெடுஞ்சாங்கடையா வுழுந்து ஒப்படச்சிருப்ப...

தலைக் கவிழ்ந்த சிங்கம்

படம்
  அந்தக் காட்டில் நரியும் பன்றியும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் புத்திசாலி என்பதிலும் யார் பெரியவர் என்பதிலும் அடிக்கடி சண்டை வரும். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிங்கத்திற்குக் கடுமையான கோபம். “நான்தான் இங்கே எல்லோரை விடவும் பெரியவர்” என நரியையும் பன்றியையும் சிங்கம் சத்தமிட்டு அழைத்தது. நடுங்கிக்கொண்டே இருவரும் சிங்கத்தின் முன் வந்தனர்.  “தேன் நிரம்பிய முழு தேன் அடையை யார் கொண்டு வருகிறீர்களோ… அவர்தான் உங்களில் பெரியவர்.” என்றது சிங்கம். வேக வேகமாக நரி ஓடியது. பன்றி நிதானமாக, ‘நரி தேன் அடையைக் கொண்டு வரட்டும். சிங்கம் தீர்ப்பு சொல்லட்டும். நாம் புத்திசாலித்தனமாகச் சிங்கத்துக்குப் பாடம் புகட்டுவோம். தேன் அடைக்குத் தேன் எப்படி வருகிறது எனக் கண்டுபிடிப்போம்’ என யோசித்துப் புறப்பட்டது.  நரி தேன் நிரம்பிய ஒரு அடையைக் கொண்டு வந்தது. அதைத் தின்று ஏப்பம் விட்ட சிங்கம், “நரி நண்பா… இந்தத் தேனைக் கொண்டு வந்த நீதான் பெரியவர்.” என்றது.  “கொஞ்சம் பொறுங்கள். பல நூறு பூக்களில் இருக்கும் இனிப்பான திரவத்தைச் சிறிது சிறிதாகச் சேகரித்து அவ்வளவு பெரிய கூட்டைக் க...