யாழிசையின் தோட்டம்

 

யாழிசை ஒரு வேப்பமரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு காகம் ஒன்று வந்தது. காற்றில் அசைந்த வேப்பமரம், “என்ன காகமே நீ தங்குவதற்கு இடம் தந்தேன். காற்று உன் கூட்டைக் கலைத்துவிடும் போலயே” எனக் கேட்டது.

“நீங்கள் ரெண்டு பேரும் தங்குவதற்கு நான்தான் இடம் தந்துள்ளேன்” என்றாள் யாழிசை.

“குட்டிச் சிறுமியே… என்னால்தான் உன்னால் மூச்சு விட முடிகிறது. நான் இல்லையென்றால் மனிதர்கள் நீங்கள் யாருமே இல்லை” என்றது வேப்பமரம்.

“ஹா… ஹா… நான் இல்லையென்றால் நீ வளர்ந்திருக்கவே முடியாது.” மண்ணை முட்டி மேலே வந்த மண்புழு, வேப்பமரத்தைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தது.

கோபம் கொண்ட காகம், “மண்புழு நண்பா அதிகம் பேசாதே… நான் ஒருமுறை தின்று போட்ட வேப்பம்பழம் தான் இன்று வேப்பமரமாக வளர்ந்து நிற்கிறது.”

“கொஞ்சம அமைதியா இருக்கீங்களா… எங்க டீச்சர் தான் எனக்கு நிறைய சொல்லித் தருவாங்க. நம்மில் யார் பெரியவர் என்று தெரிந்து வருகிறேன். அதுவரை அமைதியா இருங்க.” என்றாள் யாழிசை.

மறுநாள், யாழிசை சோகமாகத் தோட்டத்திற்கு வந்தாள்.

மண்புழு, “என்ன குட்டிப் பெண்ணே… நான்தான் பெரியவர் என்று உங்க டீச்சர் சொல்லியிருப்பாங்களே… ஆங்… எனக்குத் தெரியும்.” என்றது.

“மண்புழுவே கொஞ்சம் அமைதியா இருக்கியா… என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.” எனக் காகம் கோபம் கொண்டது.

“நாங்க இல்லன்னாலும் வேப்பமரம், காகம், மண்புழு எல்லாராலயும் இங்க வாழ முடியுமாம். ஆனா நீங்க இல்லன்னா எங்களால் வாழ முடியாதாம்னு எங்க டீச்சர் சொன்னாங்க. இனிமே நாம சண்ட போட வேணாம். நாம எல்லோரும் நண்பர்கள்” என்றாள் யாழிசை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்